Tuesday, December 6, 2011

சூரியனை விட மிகப்பெரிய 18 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!


சூரியனை விட பல மடங்கு பெரியதாக உள்ள 18 புதிய கிரகங்களை விண்வெளியில் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வாஷிங்டனில் குழுவின் தலைவர் ஜோன் ஜொன்சன் கூறுகையில், நட்சத்திர கூட்டத்தை சுற்றியுள்ள மிக அதிக கிரகங்களை கண்டுபிடித்து அறிவிக்கும் முதல் முயற்சி இதுவாகும் என்றார்.

18 கிரகங்களை கெப்ளர் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்துள்ளோம். அனைத்தும் சூரியனை விட பல மடங்கு பெரியவை. இதற்காக 300 நட்சத்திரங்களை சுற்றி தீவிர ஆராய்ச்சி நடந்தது என்றார்.

Sunday, December 4, 2011

300வருடங்கள் பழமை வாய்ந்த உல்லாச விடுதி மக்களின் பார்வைக்கு

300வருடங்கள் பழமை வாய்ந்த இங்கிலாந்து மன்னனின் உல்லாச விடுதி மக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் எட்டாவது மன்னனான ஹென்றியே இந்த உல்லாச மாளிகைக்கு சொந்தக்காரர் ஹென்றி மன்னனால் கட்டப்பட்ட இது முன் எப்போதும் காணப்படாத மிக அபூர்வமான கலை அம்சங்களைக் கொண்டதாக காணப்படுவதாக கட்டிடக் கலைஞர்கள் கூறுகின்றனர்.
இந்த உல்லாச மாளிகை 150 வருடங்களுக்குப் பின்னர் அளிக்கப்பட்டது. இதன் பின்னர் 50வருடகால ஆய்வுக்குப் பின்னர் மீட்கப்படடது. இதனை மீண்டும் புணருத்தாபனம் செய்ய தமக்கு 1250 மணிநேரம் சென்றதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது 2.2மீற்றர் நீளமும் 1.2மீற்றர் அகலமும் கொண்டது. 

கவர்ச்சியான வண்ணப் பலகைகளாலும் நுண்ணிய அலங்காரங்களால் மெருகூட்டப்பட்ட பளிங்கு பிலாஸ்டிக் பொருட்களாலும் பார்ப்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுல்லாச மாளிகையின் சூழலில் அமைந்துள்ள சுவர்கள் உரோம அரசர்களின் சின்னங்களாலும் பல கடவுகளின் உருவங்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

Saturday, December 3, 2011

உயிருடன் புதைக்கப்பட்டு 'மரண பாடம்' கற்கும் மருத்துவ மாணவர்கள்..

தாய்வானைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணரச் செய்வதற்காக சவப்பெட்டியில் வைத்து பல நிமிடநேரம் உயிருடன் புதைக்கப்படுகின்றனர்.

'ரெண்டே மருத்துவ கல்லூரியில்' பதின்மர் வயதான மருத்துவ மாணவர்களுக்கே இந்த விசித்திர பாடம் நடத்தப்படுகிறது. மரணம் தொடர்பாக தெரிந்துகொள்வதற்கு இந்த பாடம் அவசியம் என விரிவுரையாளரகள் கூறுகின்றனர்.


இதில் பங்குபற்றும் மாணவர்கள் உயிலொன்றை எழுத வேண்டும். பின்னர் பிரேதங்களுக்கான உடைகள் அணிந்தவாறு சவப்பெட்டிக்குள் படுத்துக்கொள்ள வேண்டும்.

இம்மாணவர்கள் சவப்பெட்டியுடன் சேர்த்து புதைக்கப்பட்டு சில நிமிடங்களின் பின்னர் மீட்கப்படுவர்.

பேராசிரியர் கியு டேடெங் இது தொடர்பாக கூறுகையில் 'இது வெறும் 10 நிமிட பாடம்தான் என்றாலும் உண்மையான மரணத்திற்கு சமமான அனுபவம் இது' என விபரித்துள்ளார்.

இதில் பங்குபற்றிய மாணவர் ஸியாவோ லின் தெரிவிக்கையில் 'நான் சவப்பெட்டியில் இருந்து வெளியில் வந்ததும் மீண்டும் பிறந்து வந்ததாகவே உணர்ந்தேன். இப்போது வாழ்வின் ஒவ்வொரு நொடிகளினதும் முக்கியத்துவத்தை நான் உணர்ந்துக்கொண்டுள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Wednesday, November 30, 2011

ஏழாம் அறிவு படத்தின் விஞ்ஞானம் நிஜமாகும்-அதிர்ச்சி தகவல்..

மனிதர்களையே அழித்துவிடக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்டFlu வைரசினைக் கண்டுபிடித்தமை பற்றிய விபரங்களை நெதர்லாந்தின் விஞ்ஞானிகள் வெளியிடவுள்ளனர்.

இந்த அபாயகரமான வைரஸ் H5N1 பறவைக்காய்ச்சல் வைரசினை ஒத்ததாகும். ஆனால் இது அதனை விடவும் கிருமித்தொற்று மிக்கதென்றும் ஒரு தடவையிலேயே மில்லியன் கணக்கானோரில் கடத்தப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகின்றது.
இதனால் இந்த ஆய்வு சர்ச்சைக்குரிய நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன் விஞ்ஞானிகளையும் இரு பிரிவாகப் பிரித்துள்ளது.

ஒரு பகுதியினர் இதன் விபரங்களை வெளியிடக்கூடாது என்றும் சிலர இதனைச் செய்யவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பறவைக் காய்ச்சலின் வைரஸ் 500 பேரை மட்டுமே கொன்றது. அத்துடன் உலகளாவிய ரீதியில் பரம்பலடையாது. ஆனால் தற்போது உருவாக்கப்பட்ட வைரஸ் எதிரிகளின் கைகளில் கிடைத்துவிட்டால் மிகவும் ஆபத்தானதாக உள்ளதால் உயிரியல் போரிற்குப் பயன்படுத்தக்கூடிய அபாயத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனினும் இந்த ஆய்வு சர்வதேசத்தினை H5N1 இனை முமுவதும் விளங்கிக்கொள்வதன் பாகமாகவே மேற்கொள்ளப்பட்டதென இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கண்டுபிடிப்பினால் இக்குழு ஊடகத்தின் பாய்ச்சலினை எதிர்கொள்ளவேண்டிய நிலையிலும் உள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவரீதியில் நல்லதாரு முன்னேற்றம் எனினும் துணைபோகக்கூடும் என்றும் கருதப்படுகின்றது.

புதன் செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் !.......

பூமியில் உயிரினங்கள் வாழ்வதைப் போன்று புதன் செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? போன்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பூமியின் அண்டை மண்டலத்தில் வானில் இருந்து விழுந்த நட்சத்திர எரிகற்களைச் சோதனையிட்டதில் அவற்றில் உள்ள பாக்டீரியாக்காளுடன் பூமியில் வாழும் மனித பாக்டீரியா அணுக்களுக்குத் தொடர்பு இருப்பதை நாசா விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் ஹூப்பர் கண்டுபிடித்துள்ளார்.

பூமியில் எப்படி மனித வாழ்க்கை தொடங்கியது என்பதை நட்சத்திர சரிகல் ஆதாரத்துடன் கிடைத்துள்ள பூமியின் அண்டை மண்டல அந்நிய மனித வாழ்க்கை முறை விபரித்துவிடும் என்று ஹூப்பர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“அண்டார்டிகா சைபீரியா அலஸ்கா ஆகிய இடங்களில் கிடைத்த நட்சத்திர எரிகற்கள் வித்தியாசமானவை. இந்த நட்சத்திர கற்களில் பலவற்றை முன்பு நான் பார்த்ததில்லை. இங்கு கிடைத்த நட்சத்திர எரி கற்களில் ஒன்பதுதான் பூமியில் உள்ளது.

பூமிக்குள் மட்டும் மனித வாழ்க்கை அடங்கிவிடவில்லை. பூமிக்ககு வெளியேயும் மனித வாழ்க்கை தொடர்கிறது என்பதை இவை காட்டுகின்றன. இவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்று பல விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இவற்றுக்கு எல்லாம் மேலாக பூமியில் வாழும் மனித இனத்துடன் நட்சத்திர எரி கற்களில் கண்டறிந்த பாக்டீரியாக்கள் தொடர்புடையவை என்பதுதான்.

நைட்ரஜன் இல்லாத இடத்தில் எப்படி பாக்டீரியாக்கள் உயிர் வாழ்ந்திருக்க முடியும் என்ற சந்தேகம் எழலாம். இதுதொடர்பாக பல விஞ்ஞானிகளிடம் கருத்துக் கேட்டேன். ஆனால் அவர்களால் இதற்கு விளக்கம் அளிக்க முடியவில்லை” இவ்வாறு ஹூப்பர் தெரிவித்துள்ளார் .இவரது இந்த ஆராய்ச்சி அண்டத்தின் அமைப்பு பற்றிய விஞ்ஞான பத்திரிகையில் வெளியாகியுள்ளது. இதுபற்றி மறுஆய்வு மேற்கொள்ள உலக அளவிலிருந்து ஐயாயிரம் விஞ்ஞானிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

நேர்முகத் தேர்வுக்கு முகம் கொடுப்பது எப்படி ?

சிறப்பாக பணிபுரிவதற்கான திறன் இருந்தும், நேர்முகத்தேர்வு (இண்டர்வியூ) என்றாலே பல இளைஞர்களுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிடுகிறது.

என்னதான் தகுதி, திறமை மற்றும் அனுபவம் போன்றவை இருந்தாலும், நேர்காணல்களில் பங்கு கொள்ளும்போது தேவையற்ற பயம், பதற்றம், முன்கூட்டியே திட்டமிடாமை போன்ற சிக்கல்களில் சிக்கி பல இளைஞர்கள் தவிக்கிறார்கள்.

இதனால் நேர்முகத் தேர்வாளரின் மனதில், நம்மை பற்றிய ஒரு எதிர்மறை எண்ணம் ஏற்பட்டு, நாம் நமது வாய்ப்பை இழந்து விடுகிறோம். நம்முடைய பெரிய எதிர்பார்ப்பானது, 10-20 நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும் ஒரு சிறிய நிகழ்வில் நொறுங்கிப்போவது நம்மை நம்பிக்கை இழக்க செய்கிறது.

ஒரு நேர்முகத் தேர்வில் எவ்வாறு பங்குபெற்று அதை வெற்றிகரமானதாக ஆக்கி, நமக்கான பணியை பெறுவது என்பதைப் பற்றிய சில ஆலோசனைகள் இங்கே...
அடிப்படையானவை:
நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது அலுவல் ரீதியான உடை அணியவும். குறித்த நேரத்தில் சென்று விடவும். நேர்முகத்தேர்வு அதிகாரி உங்களிடம் நல்ல நட்பு முறையில் பேசினாலும்கூட, அதனால் நீங்கள் அதிக உரிமை எடுத்துக்கொள்ள கூடாது. அவர்களிடம் தனிப்பட்ட கேள்வியோ அல்லது அவர்களை வாழ்த்தியோ எதுவும் பேச வேண்டாம். உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களையும் கவனத்துடன் அதேசமயம் அளவுடன் கூறவும்.

உங்கள் மொபைல் போனை சுவிட்ச் - ஆப் செய்து வைத்து விடவும். உங்கள் முழு கவனத்தையும் நேர்முகத்தேர்வில் செலுத்துவதோடு, அச்சமயத்தில் இங்கும் - அங்கும் பார்ப்பதை தவிர்க்கவும். மேலும் உங்கள் நேர்முகத்தேர்வு அதிகாரி, உங்களிடம் ஏதேனும் பேசிக்கொண்டிருக்கும்போதே நீங்கள் குறுக்கே பேசுவதை தவிர்க்கவும்.
நேர்முகத்தேர்வுக்கு செல்லும்போது உங்களின் சுயவிவர விண்ணப்பத்துடன், உங்களின் சான்றிதழ்கள், நோட்பேட் மற்றும் பேனா போன்றவைகளையும் எடுத்து செல்லவும். உங்கள் சுயவிவர விண்ணப்பத்தில் ஏதேனும் எழுத்துப் பிழை அல்லது இலக்கண பிழை உள்ளதா என்பதை சரிபார்ப்பதோடு, உங்களின் சுயவிவர விண்ணப்பத்தில் என்னென்ன விவரங்கள் உள்ளன என்பது முதலில் உங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.

தயாராக இருத்தல்:
நீங்கள் விண்ணப்பிக்கும் வேலை, நிறுவனம் போன்றவை பற்றி அதிக விவரங்களை தெரிந்து வைத்திருக்கவும். மேலும், நீங்கள் ஏன் உங்களின் முந்தைய பணியிலிருந்து விலகினீர்கள்? ஏன் இந்த பணிக்கு விண்ணப்பித்தீர்கள்? இந்த வேலையில் உங்களின் எதிர்பார்ப்பு என்ன? போன்ற கேள்விகளுக்கு எவ்வாறு பதில் சொல்வது என்று முன்பே தயாராகி கொள்ளவும். ஏனெனில் இத்தகைய கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதில்களின் மூலமாகத்தான் உங்களின் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை நேர்முகத் தேர்வாளர்கள் மதிப்பிடுவார்கள்.
நேர்முகத் தேர்வுக்கு முன்பாக உங்களின் சுயவிவர விண்ணப்பத்தை மீண்டும் ஒருமுறை நன்கு படிக்கவும். இதன்மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, உங்களின் சுயவிவர விண்ணப்பத்தை ஒட்டிய பொருத்தமான பதில்கள் அளிப்பதை உறுதிசெய்ய முடிவதுடன், நேர்முகத்தேர்வு குழுவையும் திருப்தி செய்ய முடியும்.

விழிப்புணர்வு:
உங்களின் நேர்முகத்தேர்வு செயல்பாட்டில் விழிப்புடன் இருக்கவும். ஏனெனில் உங்களின் முந்தைய பணி மற்றும் அந்த நிறுவனத்துடனான உங்களின் உறவு போன்றவை பற்றி கேள்விகள் கேட்கப்படுகையில், எச்சரிக்கையுடனும், தந்திரமாகவும் பதிலளிக்க வேண்டும். ஒருவேளை உங்களின் பழைய அனுபவம் கசப்பானதாக இருந்தாலும், அவற்றைப் பற்றி சாதகமான பதிலையே கூறவும். பேசும்போது நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதத்தில் பேசவும். பேசியவற்றையே திரும்ப திரும்ப பேசினால் நீங்கள் பதட்டத்தில் இருக்கிறீர்கள் என்று காட்டிக் கொடுத்துவிடும். மேலும் கால்களை ஆட்டிக்கொண்டே இருத்தல் மற்றும் கைகளை இறுக்கமாக பற்றியிருத்தல் போன்ற உங்களின் செயல்கள் நீங்கள் பயத்தில் இருக்கிறீர்கள் என்பதை காட்டிக்கொடுத்து விடும்.

கேள்விகள்:
நேர்முகத்தேர்வாளரிடம், ஆரம்பத்திலேயே விடுமுறை, பிற வசதிகள் போன்றவற்றை பற்றி கேட்ககூடாது. முதலில் நேர்முகத்தேர்வு முழுவதும் முடிய வேண்டும். நீங்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டீர்கள் என்று தெரிந்த பின்னர், நிறுவனத்தின் சலுகைகள் மற்றும் வசதிகளைப் பற்றி கேட்கவும். மேலும் இவற்றைவிட, நேர்முகத்தேர்வாளர் சம்பள விவரத்தை பற்றிபேச அவருக்கு முதலில் வாய்ப்பு தர வேண்டும். நேர்முகத்தேர்வின்போது முதல் சில நிமிடங்களில் நீங்கள் வெளிப்படுத்தும் உங்களின் செயல்பாடுதான், உங்களுக்கான வாய்ப்பை தீர்மானிக்கிறது. எனவே பதற்றப்படாமல் நன்கு யோசித்து செயல்படவும். நேர்முகத்தேர்வு என்பது ஒரு போர்க்களம் போன்றது அல்ல. எனவே அதை நினைத்து பெரிதாக பயப்பட தேவையில்லை. அதேசமயம் வாழ்க்கை போராட்டத்தில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அசட்டையாக இல்லாமல், சற்று விழிப்புடணும் எச்சரிக்கையுடணும் இருந்தாலே வெற்றியை நிச்சயமாக்கி கொள்ளலாம்.

அமேசான் நதி உருவானது எப்படி ?



உலகின் மிகப் பெரிய மழைக்காடுகள் நிறைந்த பகுதி அமேசான்.நூறு சதவிகித ஓக்சிஜன் கிடைப்பதும் இங்கே தான் .ஆகவே இவ் பதிவில் அமேசான் மழைக்காடுகள் எவ்வாறு உருவானது என்பதை பார்ப்போம்.



பூமி பிறந்து சுமார் 450கோடி ஆண்டுகள் ஆகியிற்று.380கோடி ஆண்டுகள் வரை பூமியில் எந்த உயிரினமும் தோன்றவில்லை.நெருப்புக் குழம்பான பூமி குளிர்ந்து பாறையாகியது.கடல்கள் உருவாகின.அதன் பிறகு உயிர்கள் உருவாகின.ஆனால் அப்போது ஓக்சிஜன் துளிகூட ப+மியில் இல்லை.


அப்படியென்றால் எப்படி சுவாசிக்க முடியும்?

அப்போதுள்ள உயிரினங்கள் ஹைட்ரஜனை மட்டுமே சுவாசித்தன.தாவரங்கள் பூமியில் தோன்றி பிறகுதான் அவை உணவு தயாரிக்கும் போது ஓக்சிஜன் உருவானது. ஓக்சிஜன் உருவாகி சுமார் ஜம்பதுகோடி ஆண்டுகளாகின்றன.

உயிரினங்களின் வரலாறு அறிய காலத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்திருக்கின்றனர்.தொன்மைக்காலம் இடைக்காலம் தற்காலம்.சுமார் ஜம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி வடக்கே லாரேசியா தெற்கே கோண்டுவானா என இரண்டு நிலப்பரப்புகளாக இருந்தது.

20-25 கோடி ஆண்டுகளுக்கு மன் பாஞ்சயா என்ற ஒற்றைத்திட்டாக மாறிவிட்டது.புவித்தட்டு நகர்வால் பாஞ்சயா உடைந்து இப்போதுள்ள கண்டங்கள் உருவாகின.அட்லாண்டிக் பெருங்கடல் அகன்றது.

பாஞ்சயா கண்டமாக இருந்த காலத்தில் கங்கோவின் துவக்க கால ஆற்று பகுதியில் அமேசான் ஆறு மேற்கு நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.அப்போது கடல் நீர் நிலப்பரப்புக்குள் அடித்துக்கொண்டு வந்தது.இதனால் அமேசான் ஆறும் அடித்துசெல்லப்பட்டது.கடல் நீர் பெரு பொலிவியா நாடுகளை நெருங்கியது.அமேசான் ஆற்றுப்படுக்கையைக் கண்டத்துடன் இணைந்தது.

தற்காலத்தில்தான் இன்றைய காடுகளின் அமைப்பும் மழைக்காடுகளும் உருமாற்றம் பெற்றன.இதே கால கட்டத்தில் தென்அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா துண்டிக்கப்பட்டு எதிர்திசையில் நகர்ந்தது.இந்த இடைவெளியின் நடுவே உருவானதுதான் அட்லாண்டிக் பெருங்கடல்.அதுவரை அமேசான் ஆறு மேற்கு நோக்கி பசிபிக் பெருங்கடலில் கலந்து கொண்டிருந்தது.

தற்காலத்தில்தான் உலகில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன.தென்அமெரிக்க பூமித்தட்டும் நாஸ்கா தட்டும் ஒன்றுடன் ஒன்று நெருங்கியதன் விளைவாக உருவானது தான் ஆண்டிஸ் மலைத்தொடர்.

ஆண்டிஸ் மலையின் எழுச்சியும் உலகில் நிகழ்ந்த நிலவியல் மாற்றங்களும் அமேசான் ஆற்றையும் போக்கையும் மாற்றியன.ஆண்டிஸ் மலை உயர்ந்ததால் பிரேசில் கயானாவில் இருந்த பாறை திட்டுகள் அமேசானின் ஓட்டத்தை தடுத்தன.அமேசான் ஆறு என்ற நிலையிலிருந்து உள்நாட்டுக் கடலாக உருமாற்றம் அடைந்தது.காலம் மாற மாற உப்பு நீராக இருந்த அமேசான் பெரிய சதுப்பு நிலமாக மாறி அதன் பின்னர் பெரிய நல்ல நீர் ஏரியாக மாறியது.கடலிருந்து வந்த உயிரினங்களும் ஆற்று நீருக்கு ஏற்ற வகையில் தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றி கொண்டன.